Saturday, June 12, 2010

பீர்பால் கதைகள்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.

பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு.

அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு.

அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.

தெனாலி ராமன் கதைகள்

கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.
"நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?' என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.

""ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?''

""அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,'' என்றான்.

அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார்.
பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், ""அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,'' என்றான் தெனாலிராமன்.

பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:

""புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது.

""இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,'' என்றான்.

மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.

நன்றி "சிறுவர் மலர் "

Friday, June 11, 2010

முல்லாவின் அறிவாற்றல்

குழந்தைகளுக்கான கதை

முல்லாவின் மேல் பொறாமை கொண்டவர்களும் அவரின் திறமையை கண்டு எரிச்சல் பட்டவர்களும் அரசரிடம் சென்று முல்லாவை பற்றி குறைத்து பேசி ,அரசர் முல்லா மேல் அளவுக்கு அதிகமா மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக குறை பட்டு கொண்டனர் .

அரசர் அதற்கு பதில் அளிக்க விரும்பி ,அதே சமையம் அவர்களுக்கும் முல்லைவின் திறமையை தெரிவிக்கும் விதமாக அவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்
அவையில் உள்ளவர்களே ! நான் உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா

கேளுங்கள் அரசே!

அரசர் .,"நான் இப்போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் அவர் கழுத்து வெட்டப்படும் ! தவறாக பதில் சொன்னால் அவர் தூக்கில் இடப்படுவார் ! என்ன தயாரா!!" என்றார் .,

எல்லோரும் திரு திரு என்று விழித்தனர் யாரும் பதில் அளிக்க முன் வரவில்லை !!

அரசர் ,முல்லாவை வரவழைத்து இதேயே அவரிடமும் கேட்டார்

அதற்கு முல்லா சற்றும் யோசிக்காமல் அரசே ."என்னை தூக்கில் இடுங்கள்" என்று சாமர்த்தியமாக பதில் கூறினார்.
இப்போது அவரை தூக்கில் போட்டால் அது சரியாகி விடும்;ஆகவே தூக்கில் போடா முடியாது
சரியென்று அவரை கழுத்தையும் வெட்ட முடியாது;என் என்றால் தூக்கில் போடுமாறு கூறுகிறார் !!
அரசர் ,பார்த்தீர்களா முல்லாவின் அறிவு திறமையை என்று எல்லோருக்கும் சொல்லி .முல்லாவுக்கு தகுந்த பரிசு அளித்து சிறப்பித்தார் .

ஆகவே குழந்தைகளே நீங்களும் இம் மாதிரி நல்ல கதைகளை கேட்டு பயன் பெறுங்கள் .

MY ROOM

I have visited my friend house.Her daughter wrote something in the paper and affixed in front of her room.Its interesting as shown below.,

MY ROOM

AND MY RULES ARE STRICT



IT IS ABSOLUTELY FORBITTEN:

- to enter without my permission!

-to listen outside my door!

-to borrow something without approval!

to make stupid comments on my posters!

to open my drawers!

to gothrough my collections!

to sit down on any of the scorpions!

to eat sweets without offering me one!

to criticize with my musicical taste!

to make correction on my notes!

to mention the word “HOME WORK”!

to argue with the owner of this room!

BUT IT IS PERMITTED:

-to put a coin in the money-box!!

-to flatter the owner of the room!!